tamilnadu

img

அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: கருவலூர் ஊராட்சிக்கு விதிவிலக்கா?

அவிநாசி, மார்ச் 20- கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் நோய்த்தொற்றை  தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சந்தைகள் மூடப் பட்டுள்ளன. கோவில்களும் அடைக்கப்படுகின்றன.  இந்நிலையில், கருவலூர் ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினரான  பாஜக பிரமுகர் வாணி மகேஸ்வரி கபில் தேவ் தலைமையில், ஊராட்சி செயலர் பரமன் முன்னிலை யில்  தார் சாலை அமைப்பதற்காக  அடிக்கல் நாட்டும் பணி (பூமி பூஜையுடன்) வெள்ளியன்று நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சிகள் மார்ச் 31 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குறைதீர் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கருவலூரில் மட்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

;