அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பேட்டி
மேட்டுப்பாளையம், டிச. 4- புகார் தெரிவித்தும் சாயும் நிலை யில் உள்ள சுற்றுச்சுவரை அப்புறப் படுத்தாத அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய்தத் கூறி யுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்ததில் பெண் கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை புதனன்று நேரில் ஆய்வு செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் பொதுச் செயலாளர் சஞ்சய்தத், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “17 அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த சுற்றுச்சுவர் சாயும் நிலையில் இருப்பதாக இப்பகுதி மக்கள் அதி காரிகளிடம் புகார் தெரிவித்த பின் னரும் இதனை முறைப்படி அப்புறப் படுத்தாதது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு செயல்படாத, மக்களின் நலனில் அக்கறை இல்லாத அரசு என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஏதேனும் துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு முதல்வரும், துணை முதவரும், அமைச்சர்களும் வருவது, ஏதேனும் நிவாரணம் வழங்குவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீது மட்டு மல்ல, மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்த மாவட்டத்தில் உள்ள உள்ளாட் சித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்குவதோடு இடிந்து விழுந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.