பொள்ளாச்சி, அக்.24- கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த கோட்டூர் சோமந் துறை சித்தூரைச் சேர்ந்தவர் சுப்ர மணியம்(31). இவர் பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தின் பணி மனை கிளை 3 ல் நடத்துனராக பணி யாற்றி வருகிறார். இவருக்கு சுமதி (28) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில், கடந்த வாரம் பொள்ளாச்சி பேருந்து நிலைய உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் தணிக்கை அலு வலர் ஸ்ரீதர் ஆகியோர், நடத்துனர் சுப்ர மணியத்தை சிறப்பு இயக்கம் மூலமாக அதிக பயணிகளை ஏற்றி வருவா யினை அதிகப்படுத்த வேண்டுமென நிர்பந்தம் செய்து, தகாத வார்த்தை களால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நடத்துனர் சுப்ரமணியம், பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, அவரது மனைவி சுமதி கோட்டூர் காவல் நிலை யத்தில், வெள்ளியன்று புகார் அளித்துள்ளார். ஆனால், எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதை யடுத்து திங்களன்று போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் கோட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வியாழனன்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்த னர். இதைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவை யடுத்து, பொள்ளாச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரின் பார்வையின் கீழ், பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் தணிக்கை அலுவலர் ஸ்ரீதர் மீதும் 505 (1) மற்றும் 294 -b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது.