tamilnadu

img

உடல் உறுப்பு தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் சாதனை

கோவை, பிப். 27-  கோவை அரசு மருத்துவமனை யில் முதன் முறையாக மூளைச்சாவு அடைந்த நபரின் சிறுநீரக உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டு, மற் றொரு நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம், கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன்  சிவ பெருமாள் (35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த பிப்.3ஆம் தேதி யன்று சிவ பெருமாள் தனது வீட்டின்  அருகே கட்டுமானப்பணிகளை மேற் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில், சிவ பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சிவ பெருமாளின் குடும்பத்தி னர் முன்வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.5 ஆம் தேதியன்று முதன் முறையாக கோவை அரசு மருத்துவ மனையில் பெறப்பட்டது. பல தனி யார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெற்று வந்தாலும்,  அரசு மருத்துவமனையில் முதன் முறை யாக உடல் உறுப்பு தானம் செய்யப் பட்டது. எவ்வித இடையூறும் இல்லா மல் தானமாக பெறப்பட்ட சிறுநீர கத்தை முதல் முறையாக மற்றொரு வருக்கு பொருத்தியுள்ளனர்.  இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறுகையில்,  மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த  அருண்குமார் (34) என்பவர் கடந்த மே மாதம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிவபெருமா னின் சிறுநீரகம் தானமாக பெறப் பட்டு அதனை அருண்குமாருக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தபோதிலும் முதன் முறையாக தானமாகப் பெறப் பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை  சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு  தானங்கள் அதிக அளவில் பெறப்படும்  பொழுது பல குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக் களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.