tamilnadu

img

கோவையில் கஞ்சா வியாபாரி கைது

கோவை, ஆக.2- மதுக்கரை பகுதியில் கஞ்சா  விற்பனை செய்து வந்த நபரை  கைமுறிந்த நிலையில் காவல்துறை யினர் கைதுசெய்தனர்.  கோவை மாவட்ட காவல் எல் லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைய டுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத் தரவின்பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து வருகின்றனர். இந் நிலையில், மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வரு வதாக காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான காவலர்கள் மதுக் கரையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ரவிபிரசாத் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் விசார ணையில், அவர் கோவை உப்பிலி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் ரவி பிர சாத் (31) என்பதும், மாணவ, மாணவி களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இத னையடுத்து ரவி பிரசாத் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கைது செய்யப்பட் டவர் கைமுறிந்த நிலையில் உள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறு கையில், காவல்துறையினர் மடக்கி பிடிக்க முயலுகையில் ரவிபிரசாத் தப்பிக்க முயற்சி செய்த நிலையில் தவறி கீழே விழுந்தார். இதனால் கை எலும்பில் லேசாக விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும், தற்போது ரவி பிரசாத் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.