tamilnadu

சூதாட்டம்: 17 பேர் கைது

திருப்பூர், செப். 8 – திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில்  ஈடுபட்ட தாக 17 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங் கம் பின்புறம் சனிக்கிழமையன்று இரவு திருப்பூர்  வடக்கு காவல் துறையினர் ரோந்து பணிக்குச் சென்ற னர். அப்போது அங்குள்ள தனியார் கட்டடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந் தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவ லர்கள் விசாரணை மேற்கொண்டபோது குடிபோதை யில் இருந்த நபர்கள் காவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்களை தாக்க முய ன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த வீரக்குமார், சிவக்குமார்  உட்பட 17 பேரை காவலர்கள் கைது செய்து அவர் களிடமிருந்த ரூ.67 ஆயிரத்து 800-ஐ கைப்பற்றினர். மேலும் 7  இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

;