திருப்பூர், நவ. 28 – தமிழ்நாடு அரசுப் போக்குவ ரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நடை பெற்ற போராட்டத்தின்போது போக்குவரத்துத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த உறுதி மொழியை உடனடியாக நடைமு றைப்படுத்த வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு தங்கவேல் திருமண மண்ட பத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப் பின் திருப்பூர் கிளைப் பேரவை வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் எம்.பாலசுப்பி ரமணியம் தலைமை ஏற்க, கிளைப் பொருளாளர் என்.எஸ்.சுந்தரம் வர வேற்றார். மாவட்டத் தலைவர் ஜி.பழனிச்சாமி பேரவையைத் தொடக்கி வைத்தார். இதில் கிளைச் செயலர் ஆர்.ரா ஜேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டத் துணைப் பொதுச் செய லாளர் ஆர்.சேதுராமன் வாழ்த்திப் பேசினார். இந்த பேரவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும், 2016 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் கணக் கிட்டு வழங்க வேண்டும், 2019 ஏப்ரல் முதல் பணி ஓய்வு பெற்றோ ருக்கு வழங்க வேண்டிய ஓய்வூ தியப் பணப்பலன்களை உடன டியாக வழங்க வேண்டும், மருத் துவக் காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியத்தையும் அமலாக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பேரவையின் முடிவில் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜன் நிறைவுரை ஆற் றினார். இதில் பெண் ஓய்வூதி யர்கள் உள்பட சுமார் 100 பேர் பங்கேற்றனர். முடிவில்சங்க கிளை நிர்வாகி பூங்கொடி நன்றி கூறி னார்.