tamilnadu

img

பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம், செப். 5- மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை வியாழனன்று காலை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து  அப்படியே உபரி நீராக வெளி யேற்றப்பட்டு வருவதால் பவானி யாற்றின் வேகம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி மற்றும் கேரள காடுகளை நீர்பிடிப்பு பகுதி களாக கொண்டுள்ளது பில்லூர் ஆணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும். புத னன்று இரவு அணையின் நீர்மட் டம் 96 அடியாக இருந்த நிலையில் இதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை கார ணமாக அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயர துவங்கியது. வியாழனன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை அணைக்கான நீர்வரத்து இருந்த காரணத்தினால் அணை அதன் முழு கொள்ளளவை எட்ட துவங்கியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத் தான வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் அப்படியே அதன் மதகுகள் வழியாக பவானியாற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றின் வேகம் திடீரென உயர துவங்கியுள்ளது. ஆற்றில்  வெள்ளம் அதிகரித்து ஓட துவங்கி யுள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மேட்டுப்பாளையம் பவானி யம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந் துள்ளது. எனவே கரையோரம் வசிக் கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக பராமரிக் கப்பட்டு அதன் உபரி நீர் வெளி யேற்றப்படும், மழை குறைந்து அணைக்கான நீர்வரத்து குறையும் பட்சத்தில் தான் அணையின் மதகு கள் மூடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.