கோவை, செப். 22 கோவையில் பல்வேறு அமைப்பு கள் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை ரத்தினபுரியில் கோய முத்தூர் மேற்கு அரிமா சங்கம், அர விந்த் கண் மருத்துவமனைa, கேஎம் சிஎச்மையம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம், ரத்தினபுரி மகளிர் கூட்டமைப்பு ஆகிய அமைப்பு கள் இணைந்து இலவச கண் சிசிச்சை முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் ரத்தினபுரி மாநகராட்சி ஆரம் பப்பள்ளியில் ஞாயிறன்று நடை பெற்றது. இம்முகாமை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.வெங்கட சுப்பிரமணியன், அழகு ஜெயபாலன் மற்றும் என்.ஆர்.முருகேசன் மற்றும் இலவச முகாமை நடத்திய அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்முகாமில் ஏராள மான பொதுமக்கள் பங்கேற்று பயன டைந்தனர். இதேபோல், தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளையொட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கோவை அரசு மருத்துவ மனை ரத்த வங்கி கிளை இணைந்து குருதிக்கொடை முகாம் நடைபெற் றது. காந்திபுரம் தபெதிக அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு அமைப்பின் பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் ரத்ததான முகாமை துவக் கிவைத்து உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் தபெதிக அமைப்பு செய லாளர் ஆறுச்சாமி, நிர்வாகிகள் சாஜித் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சுசி.கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று ரத்ததா னம் வழங்கினர்.