tamilnadu

img

அரசு வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றிய அதிமுக பிரமுகர் மீது மோசடி வழக்கு

சேலம், டிச.13- சேலத்தில் அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் அரசு வேலை வாங்கித் தருவதாக 50க்கும் மேற் பட்டோரிடம் மோசடி செய்தது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர். சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாள ராக பொறுப்பு வகித்து வருகிறார். அதிமுக முக்கிய பிரமுகராக இருப்ப தால் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்ததன் அடிப் படையில் இதனை நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபுராஜ் என்பவர்  நாமக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித் தார். இதன் அடிப்படையில்  அரியானூர் பழனிசாமி மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் மீதும்  வழக்குப்பதிவு செய்து விசார ணைக்கு அழைத்துச் சென்றனர். தமிழக முதல்வருக்கு நெருக்க மாக இருந்து செயல்பட்டு வந்தவர் அரியானூர் பழனிசாமி. சேலம், பள்ளப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்க தலைவராக நீண்ட காலம் பதவி வகித்துள்ளார். முன்னதாக, வேளாண்மைத்துறையில் வேலை தருவதாக ஏராளமானோரிடம் பணம் வாங்கியது தொடர்பாக கட்சி  வட்டாரங்களில் பரவலாக பேசப் பட்டதைத் தொடர்ந்து கடந்த  கூட்டுறவு தேர்தலில் போட்டியிட  அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.