நீலகிரி, டிச.18 - உதகை அரசு தாவர வியல் பூங்காவில் 124 ஆவது மலர் காட்சியை முன்னிட்டு புதனன்று மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதன்பின் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, நீலகிரி மாவட்டமானது அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாவட்ட மாக திகழ்கிறது. அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மே மாதம் நடை பெறவுள்ள 124 வது மலர் காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதி களில் பல வண்ண மலர் செடிகளைக் கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. இதில் நீண்ட வாழ்நாட்களைக் கொண்ட சால்வியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டிமன் போன்ற மலர் நாற்றுகள் புதனன்று நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக சைக்லமன், சின ரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ் சீனியா, ரனுன்குலஸ், புதிய ரக ஆர்ன மென்டல் கேல், கேலா லில்லி, ஓரி யண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரி கோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, பிகோனியா, கேன்டிடப்ட், டெல் பீனியம், பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோசியா, ஆன்டிரைனம்,வயோலா,லை மோனியம், நிமேசியா, கேல்சியோ லெரியா, மைமுலஸ், ஸ்கேபியோசா, கலிபோர்னியா பாப்பி போன்ற 50 வகையான செடி களில் சுமார் 400 ரக விதை களானது ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப் பட்டு மலர்செடிகள் உற் பத்தி செய்யப்பட்டு பூங்கா வில் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு மலர்காட்சி அரங்கினுள் சுமார் 15 ஆயிரம் பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித் தார். இந்நிகழ்வில் அரசுத்துறை அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.