tamilnadu

img

பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம், ஆக.5- மேற்குத்தொடர்ச்சி மலைக்காடு களில் பெய்து வரும் மழை காரண மாக கோவை பில்லூர் அணை  நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் படுவதால் பவானியாற்றில் வெள் ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள காடு களை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது பில்லூர் ஆணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் நூறு அடியாகும். பவானி யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பில்லூர் ஆணை நீரை ஆதார மாக கொண்டே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் தண் ணீர் தேவைக்காக பதினைந்திற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலை யில் இவ்வாண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிப் போனதால் பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட் டது. இதனால் குடிநீர் விநியோகத் தில் சிக்கல் ஏற்பட்டதுடன் அணை யில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலை யத்திலும் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிக ளான மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து திடீரென உயரத்துவங்கியது. ஆக.3 ஆம் தேதி அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 100 அடியில் 79 அடி என நீர்மட்டம் இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஆக.5 ஆம் தேதியன்று (திங்கள்கிழமை)  காலை அதன் உயரம் 94 அடியாக உயர்ந்தது. மேலும் அணையின் நீர்வரத்து பத்தாயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் பகல் பன்னி ரண்டு மணியளவில் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை தொட்டது. ஒரே நாளில் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் சுமார் பதினைந்து அடி வரை உயர்ந்து நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு பதினெட் டாயிரம் கனஅடியாக உயர்ந்த காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.  அணையின் நான்கு மதகுகள் வழியே வினா டிக்கு பதினெட்டாயிரம் கனஅடி நீர் பவானியாற்றில் வெளியேற் றப்பட்டதால் ஆற்றின் வேகம் அதி கரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டு கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல் லுமாறு அறிவுறுத்தபட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் அறி விப்பின்படி காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் ஆற்றின் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பவானி யாற்றில் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என தெரிவிக் கப்பட்டு வருகிறது.

;