கோவை,செப்.18- ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப் பிற்கான தமிழக கல்வித்துறையின் அறிவிப்பை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர்கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் சி.பத்மநாபன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இலக்கியன், மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுசெயலாளர் ரவிக்குமார் மற்றும் திமுக, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஎம்எல், எஸ்டிபிஐ, மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, கு.ராம கிருட்டிணன் கூறுகையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, இதனால் குழந்தைகளின் கல்வி பாழாகும், இடை நிற்றல் அதிகரிக்கும், குல கல்வியை புகுத்துவதற்காகவே மத்திய பாஜக அரசு இக்கல்வி முறையை கொண்டுவந்துள்ளது. இதை தமிழ கத்தை ஆளும் அதிமுக அரசு அப்படியே நிறைவேற்ற முயற்சிக் கிறது.
தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மாநில அரசு மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு என ஏமாற்று வேலை செய்கிறது. ஏற்கனவே நீட்டிற்கு ஓராண்டு விதி விலக்கென சொல்லி ஏமாற்றி னார்கள். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரோடு ஏராள மான மாணவர்கள் கைகளில் பதாகை ஏந்தி கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்து நிலையத்தில் திமுக கட்சியின் மாணவரணியின் சார்பில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வைரத்து செய்யக் கோரியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழக மாணவர்கள் சிறு வயதிலேயே பணிக்கு சென்று குழந்தை தொழிலாளர்களாக ஆக்கும் முயற்சியாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வை அறிவித்து செயல் படுத்த முயன்று வருவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட் டத்தில்் திமுக கட்சியின் கூட்டணி கட்சிகள், மாணவரணி நிர்வாகி கள் மற்றும் மாணவர்கள் என ஏராள மானோர் கலந்துகொண்டனர்.