tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு திருப்பூரில் ரூ.1.05 லட்சம் முதல் தவணை நிதி ஒப்படைப்பு

திருப்பூர், செப். 13 – சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு திருப்பூரில் சிஐடியு சங்கங்கள் சார்பில் முதல் தவணையாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. சிஐடியு அகில இந்திய பொதுக் குழு முடிவுகள் விளக்கப் பேரவைக் கூட்டம் வியாழனன்று திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எஸ்.சுப்ரமணியன் பங்கேற்று பொதுக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் சிஐடியு இணைக்கப் பட்ட சங்கங்களின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் தவ ணையாக, ரூ.1லட்சத்து 5ஆயிரத்தை இணைக்கப்பட்ட ஒன்பது சங்கங்கள் சார்பில் மாநில உதவித் தலைவர் சுப்ரமணியத்திடம் வழங்கப்பட்டது.