சேலம்,டிச.9- தமிழ்நாடு டூர் டிராவல் மற்றும் ஹாஸ்பிட் டாலிட்டி அசோசியேசனின் முதலாவது ஆண்டு விழா சேலத்தில் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்ப டுத்த தமிழ்நாடு டூர் டிராவல்ஸ் மற்றும் ஹாஸ்பிட் டாலிட்டி அமைப்பு துவங்கப்பட்டது.இதில், சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய புராதான சின்னங் கள், கோட்டைகள், நினைவிடங்கள்,வழிபாட்டுத் தலங்கள்,பண்டைய கால வரலாற்றை விளக் கும் இடங்கள், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட வைகளை பொது மக்களுக்கு எடுத்துரைக் கும் வகையில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பானது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், தொல்லியல்துறையின் சென்னை மண்டல தலை வர் ஏ.எம்.வி.சுப்ரமணியம், ஹானரரி கன்சோல் ஆப் மியான்மர் இன் சென்னை, பேராசிரியர் ரங்கநாதன், மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி.பாலன், அனந்தநாரயணன், பார்மர் ஹெட் ஆப் புரோக்ராம், தூர்தர்ஸன் கேந்திரா, போர்ட் பிளேர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனை மருத்துவர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின் சேலம் சுற்றுலா வரைபடம், மெடிகல் டூரிஸம் ஆகியவற்றை வெளியிட்டு சேலம் சுற்றுலா வளர்ச்சி குறித்தும் , கடந்த ஒரு வருட கால தமிழ்நாடு டூர் டிராவல் & ஹாஸ்பிட்டா லிட்டி அசோசியேசனின் செயல்பாடு குறித்தும் பாராட்டி பேசினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பின் தமிழக இணை செயலாளர் மற்றும் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் கல்பனா, சேலம் தலைவர் ரேடிஸன் வெற்றிவேல், துணை தலைவர் த.ஹரிபாஸ்கர், ட்ரூ ஜெட் மேலாளர் பிரசன்ன குமார், ஏற்காடு கிரான்ட் பேலஸ் பிரசன்னா, கிரான்ட் கார்ட னியா கார்த்திக் சுப்பராயன், பொருளாளர் அஸ்வா பார்க் மணிகண்டன், நிர்வாக அதிகாரி சரவண குமார் ஆகியோர் செய்திருந்தனர்.