tamilnadu

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக நவ.18ல் விவசாயிகள் மறியல்

காங்கிரஸ் விவசாய பிரிவு ஆதரவு

ஈரோடு, நவ.15- உயர்மின் கோபுரங்களுக்கு அமைப்பதற்கு எதி ராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு காங்கி ரஸ் கட்சியின் விவசாய பிரிவு  ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.வி.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் கடந்த 3 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். உயர்மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைப்பதை தவிர்த்து சாலையோரமாக புதை வழி தடத்தில், கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இனிமேல் உயர்மின் கோபுரங்களை அமைப்பதை தவிர்த்து சாலையோரமாக புதை வழி தடத்தில் கேபிள் மூலம் கொண்டு செல்லுதல், ஏற்கனவே அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கு மாதாந்திர வாடகை, உழவர்களின் விரோத 1885-ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தை நீக்கி விட்டு பாதிக்கப் படுவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்றுதல், 2013 ஆம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி நிலத்தின் மதிப்பிழப்பை நிர்ணயம் செய்து அதற்கு நான்கு மடங்கு வழங்கிட வேண்டும். மேலும், மின்சாரத்துறை அமைச்சரிடம் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலை யில், தமிழக முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.18 ஆம் தேதியன்று 13 மாவட்டங் களில் சுமார் 50 மையங்களில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் உழவர்க ளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவ சாய பிரிவு நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.