tamilnadu

img

உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை, ஆக. 5 -  பிஏபி பாசன திட்ட அணை யான உடுமலை திருமூர்த்தி அணையின் கொள்ளளவு 1.90 டிஎம்சியாக உள்ளது. அணையின் மூலம் திருப்பூர், கோவை மாவட் டங்களைச் சேர்ந்த 3.77 லட்சம் விளைநிலங்கள் நான்கு மண்டல மாகப் பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகரம், குடிமங்கலம், மடத்துக்கு ளம் மற்றும் உடுமலை ஒன்றிய  கிராமங்களுக்கு குடிநீர் திட் டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணை கட்டப்பட்டு பயன் பாட்டிற்கு வந்தது முதல் பல ஆண் டுகளாக தூர்வாரப்படாததால், நீர் தேங்கும் பகுதிகளில் வண்டல் மண் தேங்கி நீர் கொள்ளளவு பெருமளவு குறைந்துள்ளது. இத னையடுத்து அணையை தூர்வா ரவும், வண்டல் மண் எடுக்கவும் அனுமதியளிக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கூடுதல்  மழை நீரை சேமிக்கும் வகையி லும், அணை மற்றும் குளங்களில் தேங்கி உள்ள வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களை வள மாக்கிக் கொள்ளும் வகையில் திருமூர்த்தி அணை மற்றும் குளங்க ளில் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. திருமூர்த்தி அணையின் கிழக்குப் பகுதியில் 5.06 ஹெக்டேர் பரப்பளவில், 50ஆயிரத்து 600கன மீட்டர் வண்டல் மண் எடுக்க அனுமதிய ளிக்கப்பட்டுள்ளது. விவசாயிக ளுக்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலமாக இருந்தால் 75 கன மீட்டர் (25  டிராக்டர்), புன்செய் நிலமாக இருந் தால் 90 கன மீட்டர்(30 டிராக்டர்), வீட்டு உபயோகமாக இருந்தால்  30 கனமீட்டர் (5 லாரி லோடு) மண்  எடுத்துக் கொள்ளலாம்.  வண்டல் மண் எடுத்துக் கொள்ள, விண்ணப்பித்த விவசா யிகளின் மனுக்களை ஆய்வு செய்து வருவாய்துறையினர் அனு மதி அளித்து வரும் நிலையில், திரு மூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி துவங்கியது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.