திருப்பூர், அக்.10- திருப்பூரில் விவசாயி நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், வடக்கு வட்டம், ஸ்ரீநகர், பிச் சம்பாளையம் புதூரில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் விவசாயி நியாய விலை கடையினை (KISHAN RATION SHOP) மாவட்ட ஆட்சி யர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் வியாழனன்று திறந்து வைத்தார். இதன்பின் அவர் தெரிவிக்கை யில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள விவசாயி நியாய விலைக்கடையானது மத்திய அரசின் உதவி யுடன் செயல்படும் அங்காடி ஆகும். இத்திட்டமா னது விவசாய பெருமக்களுக்கும், விவசாய பெருங் குடி மக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்குகின்ற அனைத்து தரப்பட்ட பொதுமக்களுக் கும் நன்மை பயக்கும் திட்டமாகும். மேலும், இந்த விவசாயி நியாய விலைக்கடை யின் முக்கிய நோக்கம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி விலையிலேயே பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். இந்த நியாய விலைக் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும். உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை பதிவு செய்யப்பட்டு தேவைக்கேற்ப பொருட்கள் மானிய விலையில் வாங்கிக்கொள்ள லாம். ஸ்மார்ட் ரேசன் கார்டு இல்லாதவர்களும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். எனவே, விவ சாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும் இந்த விவசாயி நியாய விலைக்கடையினை நல்ல முறை யில் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்நிகழ்வில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ப.கவிதா, திருப்பூர் வடக்கு வட் டாட்சியர் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாயி நியாய விலைக்கடை தலைவர் ஜெயகணேஷ், இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை செயல் அலுவலர் கிஷோர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.