டாஸ்மாக் கடை இளநிலை உதவியாளர்கள் தேர்வு
டாஸ்மாக் ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
ஈரோடு, டிச.12- இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வான, டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்காமல் அரசு இழுத்தடிப்ப தாக, டாஸ்மாக் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கோவை மண்டல அளவிலான டாஸ் மாக் ஊழியர்கள் சங்க (சிஐடியு) நிர்வா கிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2003 ஆம் ஆண்டில் 6,800 டாஸ்மாக் கடைகளை துவங்கி, பூரண மதுவிலக்கு எனக்கூறி தமிழக அரசு சுமார் 3,300 கடைகளை மூடியது. அதில் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வெவ் வேறு இடங்களில் திறந்து தற்போது 5,200 கடைகளாக செயல்படுகிறது. அரசின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்காக ரூ. 30 ஆயிரம் கோடி ரூபாயை டாஸ்மாக் வழங்குகிறது. ஆனால் டாஸ்மாக் ஊழியர் கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த ஊழியராகவும், குறைந்த சம்பளமுமே பெற்று வருகின்றனர். இதை உயர்த்த வேண்டும். மூடப்பட்ட கடைகளின் ஊழி யர்களுக்கு பிற துறைகளில், அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற பணி வழங்க வேண் டும். பிற துறைகளில் காலிப்பணியிடத் துக்கு விண்ணப்பித்த 10 ஆயிரம் பேரில் ஐநூறு பேர் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகிய நிலையில் நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை பணியாணை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக பணியாணை வழங்க வேண்டும். மேலும் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி யற்ற கடைகளை வைத்து மதுவிற்கும் நிலை உள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளில் உரிமம் பெற்றவர் விபரம், உரிம நாள் போன்ற வற்றை போர்டில் எழுதி வைக்க வேண்டும். கடை ஊழியர்கள், அங்கு வசூலாகும் தொகை மற்றும் மதுபானங்களுக்கு பாது காப்பற்ற சூழல் உள்ளது. எனவே, ஊழியர் கள் மற்றும் கடைக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மேலும் அதிகாரிகள் நிர்பந்தம், அரசியல் கட்சியினரின் இடையூறு போன்ற வற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.