tamilnadu

கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை: மாணவி ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, ஜூன் 24- கல்வி கட்டணம், விடுதி கட்டணம் செலுத்த முடிய வில்லை என மாணவி ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வனிடம் முறையிட்டுள்ளார். ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் – பத்மாவதி தம்பதி யினர். இவர்களுக்கு லட்சுமிபிரியா(21), மற்றும் பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் கவுன்சிலிங் மூலம் பிஏஎம்எஸ் எனப்படும் ‘பேச்சுலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அன்ட் சர்ஜன்’ என்ற ஐந்தரை ஆண்டு படிப்பை லட்சுமிபிரியா படிக்கி றார். தற்போது மூன்றாமாண்டு முடித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இவரது தந்தை இறந்து விட்டார். இவரது தாயார், ஜவுளிக்கடையில் தின கூலியாக பணி செய்கிறார். இதனால், இவரால் கடந்த மூன்று செமஸ்டர்களுக்கான கல்லுாரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் என தலா 1.90 லட்சம் ரூபாய் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாக லட்சுமிபிரியா வகுப்பு மற்றும் ஆய்வு கூடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து கல்லுாரிக்கும், விடுதிக்கும் வர வேண்டாம் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லட்சுமிபிரியா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அரசு மூலமும், உதவி செய்ய விரும்புவோர் மூலமும் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.