tamilnadu

வன உயிரின வார விழா முன்னிட்டு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள்

பொள்ளாச்சி, செப்.17 - வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன் ஒரு பகுதியாக,  பொள்ளாச்சி வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு பொள்ளாச்சி தாலுகாவிற்குட் பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி கட்டுரை,  ஓவியப்போட்டி வரும்  சனியன்று  ( செப்.21) பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளுமாறு பொள்ளாச்சி வனத்துறை வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.