ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து. ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லலிதா மற்றும் ரவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பாதாள சாக்கடை, வீட்டுவரிஉயர்வு, குடிநீர், நாய்த்தொல்லை ஆகிய பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.