கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு, மே 9-கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பகிறது.ஈரோடு மாவட்டம், டி.ஜி.புதூர், கோபிசெட்டிபாளையத்தில் தொழிற்பயிற்சி பெற தமிழக அரசால்துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2019-2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு எலக்ட்ரீசியன், பிட்டர்,மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக் ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங், வெல்டர் ஆகிய ஐந்து தொழிற்பிரிவுகளில் அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை இணையதளம்(www.skilltraining.tn.gov.in) மூலம் வரவேற்கப்படுகின்றன.பயிற்சியில் சேரும் மாணவ மாணவியருக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் தமிழக அரசால் மாதம் ரூ.500 உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், டி.ஜி.புதூர், கோபிசெட்டிபாளையம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04285-233234, 94990 55706, 99526 48236, 9788644878 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது
தாராபுரம், மே 9-தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ளவணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்தசதீஷ்குமார் (25) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வணிக வளாக காவலாளியை அழைத்து தனக்கு இன்று பிறந்த நாள் நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க வேண்டும். மதுவாங்கி வாருங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினார்.காவலாளி மதுவாங்க சென்றிருந்தபோது சதீஷ்குமார் கடையில் இருந்து விலை உயர்ந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பினார். திரும்பி வந்து பார்த்த காவலாளி கடையில் சதீஷ்குமார் மாயமானது குறித்தும், பொருட்கள் சிதறி கிடப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொதுமேலாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது ஊழியர் சதீஷ்குமார்பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து அவர் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுரையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை புதனன்று கைது செய்தனர்.