tamilnadu

ஈரோடு ,சேலம் முக்கிய செய்திகள்

சிலைகளை அவமதிப்பு செய்பவர்களுக்கு  தமிழக அரசு துணை போகிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு

சேலம், ஆக. 26- பெரியார் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பு செய்பவர்களுக்கு தமிழக அரசு துணை போகிறது என்று திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி குற் றம் சாட்டியுள்ளார். திராவிடர் கழகத்தின் பவள விழா  மாநாடு சேலத்தில் செவ்வாயனு நடை பெற உள்ளது. இதில் பங்கேற்பதற் காக சேலம் வந்த திராவிடர் கழகத்  தலைவர் கி வீரமணி செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ தமிழகத்தில் பெரி யார், அண்ணல் அம்பேத்கர் சிலை களை அவமதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறுகின்றன. இருவ ரும் வெறும் சிலைகளாக மட்டும் தமிழகத்தில் வைக்கப்படவில்லை. பெரியாரும் அம்பேத்கரும் ஆழமான அசைக்க முடியாத கொள்கைகள். வலுவான தத்துவங்கள். அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  இதுபோன்ற அவமதிப்புகள் செய்பவர்கள், இருவரின் கொள்கை களுக்கு ஆதரவான குரல்கள் வலு சேர்க்கும் வகையில் வெடித்துக் கிளம்பும் என்பதை அறியாதவர்கள். பெரியார், அம்பேத்கர் சிலை அவ மதிப்பவர்களை நெருப்போடு விளை யாட கூடாது என்று எச்சரிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், சிலை அவமதிப்பு செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த சம்பவங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்களை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை அடக்காமல், தெரிந்தோ தெரியாமலோ தமிழக அரசு அவர்க ளுக்கு துணை போவதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் காரணம்.” இவ்வாறு அவர் தெரிவித் தார்.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவு

ஈரோடு, ஆக. 26- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்று  துவங்கி ஆகஸ்ட் 25 வரை 20 நாட்கள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழாவில் பயிற்சியளித்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட் டதுடன், மாதிரித்தேர்வு நடத்தப்பட்டு மாணவ, மாணவிக ளுக்கு பரிசும், பாராட்டும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மதரஸா இஸ்லாமிய உயர்நிலை பள்ளி தாளாளர் இ.கே.எம்.முகமது தாஜ் முஷ்யித்தீன், அல்  அமீன் சங்கத்தின் தலைவர் அப்துல்காதர், ஐசிஒ அறக் கட்டளையின் தலைவர் முகமது நாசர் அலி, சிறுபான்மை நலக்குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, பொரு ளாளர் கே.நடராஜன், காசிபாளையம் பேரூராட்சியின் முன் னாள் தலைவர் கே.துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.  அதேநேரம், குரூப் 2 தேர்விற்கான போட்டித் தேர்வு கள் 15.09.2019 (ஞாயிறன்று) காலை 10 மணி முதல் தொடங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.