tamilnadu

img

மின்துறை பொதுத்துறையாக நீடிப்பதை உறுதிசெய்

கோவை, ஜூலை 29– மின்துறை பொதுத்துறையாக நீடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை கிளையின் 15ஆவது ஆண்டு பேரவை திங்களன்று கோவை பூ மார்க்கெட் அருகில் தனியார் கூட்டரங்கில் நடை பெற்றது. சங்க தலைவர் எம்.ஞான பிரகாசம் தலைமையில் நடைபெற்ற பேரவையில் ஆர்.ஆறுமுகம் வரவேற் றார். கே.மாதவன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில தலைவர் என்.சின்னசாமி துவக்க உரையாற்றினார். ஆண்டு பேரவை கூட்டத்தை வாழ்த்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் எஸ்.சந்திரன், பிஎஸ்என்எல் ஓய் வூதியர் சங்கத்தின் எ.குடியரசு, குந்தா கிளை செயலாளர் ஆர்.ஆர்.சுந்தரே சன் ஆகியோர் உரையாற்றினர்.  பேரவையில் புதிய தலைவராக பி.பரமாத்மலிங்கம், செயலாளராக எம்.ஞானபிரகசம், பொருளாளராக கே.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். தொடர்ந்து 8 துணை தலைவர்கள், 8 இணை செயலாளர்கள்,6 செயற் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.  இதனைத்தொடர்ந்து, புதிய ஓய் வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். நிலுவை ஊதியம் 01.01.2016 முதல் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த சொசைட்டி பணிக்காலத்தை கணக் கில் எடுத்து ஓய்வூதியம் வழங்க வேண் டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து சிறந்த மருத்துவ சேவை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். மின்துறை பொதுத்துறையாக நீடிப் பதை உறுதி செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.ஜெகதீசன்உரையாற்றி னார்.