tamilnadu

img

ஆங்கில இலக்கிய மன்ற விழா

பொன்னமராவதி, செப்.6- புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆங்கில இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வி.எஸ்டி.பி.எல்.வள்ளியம்மை தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை ஒருங்கிணைப்பாளர் எஸ்.மாரிமுத்து வரவேற்றார். ஆ.தெக்கூர் சிங்கை சித்தர்அய்யா கல்லூரி முதல்வர் ஏ.ஹேம மாலினி சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளியின் இயக்குநர் வி.எஸ்டி.பி.எல்.சிதம்பரம், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஏ.வி.பொன்னழகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலு வலர் நெ.இரா.சந்திரன், துணை முதல்வர்கள் வை தேகி, கலைமதி மற்றும் ஆங்கிலத் துறை ஆசிரியர்களும் விழா ஏற்பாடுகளை செய்தனர்.