கோவை, ஜூலை 28– இயல், இசை, நாடகத்துறையில் பங்காற்றுபவர்களுக்கு கலைமா மணி விருது வழங்கப்படுவதுபோல் சிறந்த சமையல் கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும் என சமையல் கலைஞர்கள் மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு சமையல் கலை தொழி லாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மாநாடு கோவை சின்னியம் பாளையத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநில தலைவர் நளபாக மாமணி எம்.ஜி.ராஜா மணி கொடி யேற்றி, மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் மு.இனியவன் வரவேற்றார். கோவை மாவட்ட தலைவர் எம்.முத்து, துணை தலைவர் பி.நட ராஜன், செயலாளர் பி.சேதுபதி மற் றும் கோவை மாவட்ட அமைப்பா ளர் சமையல் சக்கரவர்த்தி ஏ.நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநாட்டில் ஆண்டு அறிக் கையை பொருளாளர் ஆர்.அங்க முத்து முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து நலிந்த சமையல் கலை ஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாநாட்டை வாழ்த்தி கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் சிறப்புரையாற்றினார். இத னைத்தொடர்ந்து மாநில வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளை யன் உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர். மாநாட்டில் சமையல் தொழிலா ளிகள் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். மீன் பிடி தடை காலத் தில் மீனவர்களுக்கு வழங்குவது போல வருடத்திற்கு சொற்ப நாட் கள் மட்டும் வேலை கிடைக்கும் நிலையில் சமையல் கலைஞர்க ளுக்கு வழங்க வேண்டும். மருத் துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்து வம் பார்க்க வேண்டும். இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.