கோவை, ஆக.16- ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் சாலையோர வியாபாரி களை வெளியேற்றும் நடவடிக்கையை கோவை மாநக ராட்சி கைவிட வேண்டும் என வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சிஐடியு கோவை மாவட்ட சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் முதல் மாநாடு காட்டூர் மில் சங்க கூட்ட ரங்கில் தலைவர் வி.கருப்பையா தலைமையில் நடை பெற்றது. மாநாட்டை துவக்கிவைத்து சாலையோர வியா பாரிகள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பி.கருப் பையன் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் கே.ரத்தினகுமார் ஆகியோர் உரையாற்றி னர். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர்பி.ராமு, பொருளாளர் ஐ.பைரோஸ்கான் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். முன்னதாக, இம்மாநாட்டில் சாலையோர வியாபாரி களிடம் காவல்துறையினர் கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும். மக்கள்கூடும் இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலையோரம் கடைகள் போடுவதற்கு மாநகராட்சி அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு அளிக்காத நிலையில் தன்னம்பிக் கையோடு குடும்பத்துடன் சுய தொழில் செய்யும் சாலை யோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன்களை எளிமையாக கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதனையடுத்து, சங்கத்தின் புதிய தலைவராக வி.கருப்பையா, பொதுச்செயலாளராக பி.ராமு, பொருளா ளராக ஐ.பைரோஸ்கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட் டனர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.