tamilnadu

img

சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அன்னூர், ஜன. 25- அன்னூர் அருகே பொன்னேகவுண்டன்புதூரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை  பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர் அருகேயுள்ள மசக்கவுண்டனின் செட்டிபாளையம் ஊராட்சிக்குட் பட்ட பொன்னே கவுண்டன் புதூரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னே கவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தத் தில் இருந்து பிள்ளையார் கோயில் வரை ஒரு மாதத்திற்கு முன்பாக சாலையை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இப்பணிகள் மந்த கதியில் நடை பெற்று வருவதால் பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலைப் பணியை சீரமைத்து விரைந்து முடிக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;