பொள்ளாச்சி, மே 25 - பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து தரக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பல்லடம் சாலையிலுள்ள தொப்பம்பட்டி கிராமத்திலுள்ள பேருந்து நிழற்குடை பழுதடைந்ததாக சில நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்குடை கட்டித் தருவதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் ஒரு சில வாரங்களில் திறக்கப்பட உள்ளதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உடனடியாக இப்பகுதியில் பயணிகளுக்கான நிழற்குடை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.