கோவை, ஜூலை 13- அதிகரித்து வரும் இட நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதிகளில் தொழிற்பேட்டைகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்மா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் (காட்மா) சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சனியன்று கணபதியில் உள்ள அச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து காட்மா சங்க பொதுச்செயலாளர் சிவக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்கள் மதிப்பில் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்திற்கு வழங்கப்படும் மானியம், இனி 50 லட்சத்திற்கு வழங்க தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் உற் பத்தித் திறனை மேம்படுத்தவும் தொழிலை விரிவு படுத்தவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தற்போது வழங்கும் 3 சதவிகித வட்டி மானியம் 6 சதவிகிதமாக உயர்த் தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங் கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதிகளில் தொழிற் பேட்டைகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.