tamilnadu

img

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி,  நவ.1- குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க  தருமபுரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  தருமபுரி நகராட்சி  அரசு  மருத்துவமனை அருகே அம்பேத்கர் சிலை உள்ளது.  இங்கிருந்து ரயில்வே நிலையம் வரை செல்லக் கூடிய சாலை மிகவும் மோச மான நிலையில் குண்டும்,  குழியுமாக  உள்ளது. ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரக் கூடிய பயணிகள் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் தினமும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இத்தகைய நிலையில் படுமோசமாக காட்சியளிக்கும் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து படுகாயமடையும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாக மாறி யுள்ளது.  மேலும், தற்போது இந்த குழிகளில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டையும் ஏற் படுத்தி வருகிறது. எனவே, இச்சாலையை உடனடியாக செப்பனிட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.