தருமபுரி, நவ.29- தளவாய்அள்ளி போயர் தெருவிற்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ள தார்ச்சாலையை புதுப் பிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தளவாய்அள்ளி பஞ்சாயத் திற்குட்பட்ட தளவாய்அள்ளி போயர் தெருவில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தளவாய்அள்ளி போயர் தெரு இண்டூரிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு காலை, மாலை என ஒரு அரசு பேருந்து சென்று வரு கிறது.இந்த கிராமத்தில் நடுநிலைப் பள்ளி மட்டும்தான் உள்ளது. மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி பயில இண்டூர்,தரும புரிக்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது. தளவாய்அள்ளி போயர் தெருவில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளி வரை அரை கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். மேலும் மழை பெய்தால் சாலையில் நடந்து செல்ல முடிவ தில்லை. வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்துவிடுகின்றனர். இந்நிலையில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சார்பில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் சாலையை புதுப்பிக்க ரூ.12.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விட்டு ஓராண்டை கடந்தும் இது வரை பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிலும் வலியுறுத்தப் பட்டது.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே மேற்கண்ட குண்டும்,குழியுமாக உள்ள சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.