tamilnadu

img

கூடலூர்-குண்டல் பெட் சாலையில் இரவு நேர போக்குவரத்து தடையை நீக்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

உதகை, அக்.6- கூடலூர்-குண்டல் பெட் சாலை யில் இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவி ரதம் போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், சுல்தான் பத்தேரி குண்டல் பெட் சாலையை முழுமையாக மூடும் நடவடிக் கையை கைவிட வேண்டும். கூட லூர்-குண்டல் பெட் சாலையில் இரவு நேர போக்குவரத்து தடையை நீக்கிட வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எரு மாடு இடைக்கமிட்டியின் சார்பில்  எருமாடு பஜாரில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.  மாவட்ட  செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, எம்.ஏ. குஞ்சு முகம்மது, ஏ.யோகண்ணன்,  காங்கிரஸ் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அனஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை தலைவர் ராஜேந்திர பிரபு, திமுக செயலாளர் போஸ், ஓட்டு னர் சங்க ரவி, வியாபாரிகள் சங்க  அலியார், வாசு, எஸ்என்டிபி மாவட்ட துணை தலைவர் பிதாம் பரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டம் குழு உறுப்பினர்கள் அமீது மாஸ்டர், லிலா வாசு, தங்கராஜ், ரமேஷ், சாந்தா, எம்.ஏ .சௌகத் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பொதுமக்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.