tamilnadu

img

யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் துவக்கம்

மேட்டுப்பாளையம், டிச.15- மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு நல வாழ்வு முகாம் துவங்கப்பட்டது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவா னியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னு மிடத்தில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்து ணர்வு முகாம் இன்று துவங்கியது.  முகாமை இந்து அறநிலை யத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி துவக்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் 48நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் நலவாழ்வு முகாம் இதே பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு  முதல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக இங்கு யானை கள்முகாம் நேற்று (டிச.15) காலை துவங்கி உள்ளது. இவ் வாண்டு முகாமில் பங்கேற்றுள்ள 26 யானைகள் மற்றும்  அதன் பாகன்கள் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன.