ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் குற்றச்சாட்டு
சேலம், செப்.17- எடப்பாடி பழனிச்சாமி தலைமையி லான தமிழக அரசு, மத்திய அரசின் அடிமை யாக செயல்படுவதாக ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் குற்றம் சாட்டி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆதித்தமிழர் பேர வையின் நிறுவனர் அதியமான் செய்தி யாளர்களிடம் கூறுகையில், அடிமைக்கும் அடிமையாகவும், கொத்தடிமைக்கு கொத்தடிமையாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. தங்களின் பதவியின் மூலம் கிடைக்கின்ற கமிஷன்களையும், லஞ்சத் தையும் பாதுகாப்பதற்காகவே மத்திய அர சின் அனைத்து திட்டங்களையும் செயல் படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த மறுத்தால் அடுத்த நிமிடமே வருமான வரித்துறை சோதனை நடைபெறும். எனவேதான் மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் ஜன நாயகம், மனிதாபிமானத்தையும் எதிர் பார்க்க முடியாது. தமிழகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களை பாதிக்கின்ற வகையில் பல் வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்ப டுத்தி வருகிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அறி வித்துள்ளது. இத்திட்டம் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் அமல்படுத்தாத சூழலில் தமிழகத்தில் மட்டும் உடனடியாக அமல் படுத்தி உள்ளனர். இதனை திரும்பப் பெற வேண்டும். மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக இந்தி திணிப்பை மேற்கொண்டால் ஏற்கமாட்டோம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் குடும்பத்திற்கு ஆறுதல்
முன்னதாக, நாமக்கல் புதன்சந்தை அரசு பள்ளி ஆசிரியர் சரவணன் இல்லத் திற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து அதியமான் ஆறுதல் கூறினார். இதன்பின்னர் அவர் கூறுகையில், அரசு பள்ளியில் ஆசிரியர் சரவணன் மீது திட்ட மிட்டு தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை. மாறாக, வெளியாட்கள் துணையோடு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. ஆகவே, பள்ளி வளாகத் திற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்தியினர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர் மீது வேண்டு மென்றே புனையப்பட்ட போக்சோ சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.