tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி புகார் எதிரொலி: பல்லடத்தில் சாலை செப்பனிடப்பட்டது

திருப்பூர், நவ. 29 - பல்லடம் நகரில் அரசு மருத்துவ மனை அருகில் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருப்பது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளியன்று அந்த இடத்தை போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த செட்டிபாளையம் சாலைப் பிரிவில் இருந்து அரசு மருத் துவமனை வரை தேசிய நெடுஞ்சா லையின் இருபுறமும் மிகப்பெரும் பள்ளமும், குண்டும், குழியும் இருந் தன. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டி கள் சாலையோரம் ஒதுங்க முடியா மல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வந்தது. எனவே தேசிய நெடுஞ்சாலை யின் இருபுறமும் குண்டும், குழியு மான பகுதியைச் சீரமைக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனுக்கு கோரிக்கை மனு அனுப் பினார். இந்நிலையில், வெள்ளியன்று காலை மேற்கண்ட பகுதியில் போக் குவரத்து காவல் துறையினர் சாலை யோர பள்ளம், குண்டு, குழிகளில் கலவையை இட்டு நிரப்பி செப்ப னிடும் பணியை மேற்கொண்டனர். இந்த இடத்துக்கு அருகிலேயே காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனை இருக்கும் நிலையில் தினமும் பல நூறு பேர் இப்பகுதியை பயன்ப டுத்துவதால் விபத்தைத் தவிர்ப்ப தற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை அடிப்படையில், நெடுஞ் சாலைத் துறையின் நடவடிக்கைக்கு காத்திருக்காமல், உடனடியாக செப் பனிடும் பணி மேற்கொள்ளப்பட் டதாக போக்குவரத்து காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.