tamilnadu

img

விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

கோவை, செப்.5- கோவையில் விநாயகர் சிலை  கரைப்பின்போது நீரில் அடித்துச் செல் லப்பட்ட இளைஞரை மீட்கக்கோரி அவ ரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். கோவை மாநகர மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் புதனன்று நடை பெற்றது. இதில் விநாயகர் சிலைகள் ஊர் வலமாக கொண்டு செல்லப்பட்டு குறிப் பிட்ட குளங்களில் கரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விராலியூர் ஊர் பொதுமக் கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 அடி விநாயகர் சிலை ஆலாந்துறை அருகே உள்ள இக்கரை போலுவம்பட்டி நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த நிலையில் சிலையை கரைக்க சென்ற ராமு (21) என்ற இளைஞர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டார். இதை கண்ட பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரவு வரை இளைஞரை தேடும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. மீண்டும் வியா ழனன்று காலை முதல் இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இருப்பி னும் இளைஞரை மீட்க முடியவில்லை. இதனால் ஆவேசமடைந்த இளைஞரின்  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இளை ஆலாந்துறை அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். அவர்களிடம் ஆலாந்துறை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விநாயகர் சிலையை கரைக்க சென்ற  இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.