tamilnadu

img

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

கோவை, ஜூன் 19- குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முன்னெச்சரிக்கை நடவ டிக்கை மேற்கொள்ளாத உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலகக் கோரி புதனன்று கோவை மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திமுகவினர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகக்கடு மையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை குறித்து, எவ்வித திட்டங்களையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேற்கொள் ளவில்லை.  எனவே அவர் பதவி விலக வேண்டும். மேலும் கோவை மாநகரத் தின் குடிநீர் விநியோக உரிமையை கோவை மாநாகராட்சி அந்நிய நாட்டு நிறுவனமான  சூயஸ் நிறு வனத்திற்கு வழங்கியுள்ளது. இதனால் குடிநீர் கட்டணம் பல  மடங்கு உயரும் ஆபத்து உள் ளது. மேலும் பொதுக்குழாய்களே இல்லாமல் போய்விடும். இதனால் சாதாரண மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள். எனவே,  சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கைளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரா விட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை மாநகர காவல் துறையி னர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.  இந்நிலையில் தடையை மீறி திமுக மாநகர் மாவட்ட செயலா ளர் எம்எல்ஏ நா.கார்த்திக் தலை மையில் காலிக்குடங்களுடன் மாநகரட்சியின் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனி சாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டனர்.