அவிநாசி, ஜூன் 26- திருமுருகன்பூண்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்கு மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தமிழகத்தில் கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அலுவ லகம், திடக்கழிவு மேலாண் மை பூங்கா அருகில் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாள்களாக குடிநீர் வீணாகி வருகிறது. வீணாகும் குடிநீர் பெருக்கெடுத்து மயானத்திற்குள் செல்கிறது. இதனால் மயானத்தில் குடிநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் குடிநீரின்றி ஒரு புறமும், மயானத்திற்கு செல்வதற்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.