tamilnadu

img

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்  

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்  தலைவிரித்தாடுகின்றது. இதில் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செவ்வாயன்று குடிமங்கலம் ஒன்றியம் பெதபம்பட்டியில் திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணியின் செயலாளர் மு.பெ.சாமிநாதன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.