tamilnadu

நிவாரணம் பெற பொற்கொல்லர்களை அலைகழிக்காதீர்

தங்கநகை தொழிலாளர் யூனியன் வேண்டுகோள்

கோவை, மே 16 –  ஊரடங்கு கால நிவாரணத்தை பெறுவதற்கு நலவாரிய அலுவலகம், அஞ்சல்துறை அலுவலகம் என  பொற்கொல்லர்களை அலைகழிக்கா மல் உரிய ஏற்பாட்டை செய்து வழங்க  வேண்டும் என கோவை மாவட்ட தங்க நகை தொழிலாளர் யூனியன் வலியு றுத்தி உள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழிலில் லட்சத்திற்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சிறு பட்டறைகளில் ஈடுபடும் இவர் கள் தற்போதைய ஊரடங்கு காரண மாக பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர். இத்தகைய சூழலில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்க ளுக்கு மட்டும் நிவாரணம் என்பது ஏற்பு டையதல்ல. ஏற்கனவே தங்கநகை தொழில் செய்பவர்கள் தங்கத்தின் விலை நிலையாக இல்லாததால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த னர். தற்போதைய ஊரடங்கால் முற்றி லுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அனைத்து பொற்கொல்லர்க ளுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். 

மேலும், நலவாரியத்தில் பதிவு  செய்து ஓய்வூதியத்திற்காக விண்ணப் பித்துள்ளவர்களுக்கு, ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை. இத னால் இதனை நம்பியுள்ள ஏராள மான பொற்கொல்லர்கள் பெரும் அவ திக்குள்ளாகியுள்ளனர். மேலும், நிவா ரண தொகை வழங்கப்படுவது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் நலவாரிய அலுவலகம், அஞ்சல்துறை என அலைகழிக்கப்படுகின்றனர். ஆகவே, தமிழக அரசும், நலவாரியமும் உடனடியாக உரிய ஏற்பாடுகளை செய்து  பொற்கொல்லர்கள் நிவா ரணத் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என  அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட் டுள்ளது.