tamilnadu

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்காதே! துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்திடு!

கோவை, அக்.20–  மருத்துவக் கல்வியில் கிராமப் புற மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு  வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர்  நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற  தமி ழக  கிராமப்புற  மாணவர்களுக்கு  7.5 சதவிகிதம்  உள்ஒதுக்கீடு  வழங்குவதற் கான  சட்டம் சட்டமன்றத்தில் இயற் றப்பட்டு  ஆளுநரின்  ஒப்புதலுக்காக  தமிழக அரசு அனுப்பி  வைத்துள்ளது.  ஆனால்,  இன்றுவரை அதற்கு  ஆளு நர்  ஒப்புதல் தராமல், திட்டமிட்டு  உள் நோக்கத்துடன் காலம் கடத்திக் கொண்டுள்ளார். ஆகவே, இச்சட்டத் திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழ கத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துணைவேந்தர் சூரப் பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் செவ்வாயன்று தமிழகம் முழுவ தும் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட  செய லாளர் வி.இராமமூர்த்தி தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநி லக்குழு உறுப்பினர்கள்  சி.பத்மநாபன்,  ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே. மனோகரன், அஐய்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை ஏற்றார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் தௌ.சம்சீர் அகமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற் றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராஜகோபால், கே.உண் ணிகிருஷ்ணன், என்.கோபாலகிருஷ் ணன், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ் உட் பட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  தருமபுரி தருமபுரி தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார்.  மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, இரா.சிசு பாலன், எம்.முத்து, எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன் மற்றும் ஆர். ஜோதிபாசு, ஜி.நக்கீரன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார், எம்.குணசேகரன், ஜி.கணபதி மற்றும் பொன்.ரமணி, எம்.கனகராஜ், என். பிரவீன்குமார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, கே.தங்கமணி, பி.ஜெயமணி, வேலுச்சாமி, ஏ.டி.கண்ணன் மற்றும் பி.செங்கோடன், பி.செல்வராஜ், தேன் மொழி உட்பட பலர் கலந்து கொண் டனர்.  நீலகிரி  உதகை ஏடிசி சுதந்திர திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித் தார். இதில், கே.ராஜேந்திரன், எம்.ஏ.வினோத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.