கோவை, ஜூன் 12- திமுக மூத்த தலைவர்கள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் படத்திறப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புக ழாஞ்சலி செலுத்தினார். திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் மறைந்த மு.இராமநாதன் மற்றும் மறைந்த திமுக தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சி புதனன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மறைந்த தலை வர்களின் படத்தை திறந்துவைத்து புகழாஞ்சலி செலுத்தினார். அப் போது அவர் பேசுகையில், திரவிட இயக்கத்தின் முன்னோடிகளாக, தியாகச்சுடர்களாக விளங்கியவர் கள் மு.இராமநாதன், வழக்கறிஞர் க.ரா.சுப்பையன். இவர்களின் படம் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திமுக இயக்கத்தின் பாடங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவர்கள். அந்த பல்கலை யில் படித்தவர்கள் தான் நாம் அனைவரும். மு.இராமநாதன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக பல்வேறு நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்ற வர். கோவையின் மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி, உயர் நிலை செயல்திட்டகுழு உறுப்பின ராக இருந்தார். கோவை தெற்கு பகுதியின் எம்.எல்.ஏ. வாக இரு முறை தேர்வு செய்யப்பட்டு தொகுதி மக்களுக்காக பாடுபட் டார். கோவை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். அவரை மறக்க முடியாது. இதேபோல், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, திமுகவில் இணைந்து சட்ட கல் லூரியில் தமிழ்மன்ற செயலாள ராக பணியாற்றி அண்ணாவிடம் அறிமுகமாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் க.ரா.சுப்பையன்.
தற்சமயம் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதம ராக மோடி பொறுப்பேற்ற பின், மும்மொழி திட்டம், புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை தயாரித்துள்ள செய்தி வந்த கொடு மையை பார்க்கிறோம். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாண வர்கள் நடத்திய போராட்டங் களை அவர்கள் உணராமல் இருக் கின்றனர். இந்த அறிவிப்பு வெளி யான சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த்தோம். அதனால், மீண்டும் அந்த வரலாறு திரும்புவதற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன் னேன். இந்தி எதிர்ப்பு போராட் டத்தில் முக்கிய பங்காற்றியவர் கள் இந்த இருவரும் தான். இந்த சூழலில் இரண்டு தலைவர்களின் படங்களை திறப்பது பொருத்த மாக இருக்கிறது. திருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சட்ட நகலை எரித்து கைது செய்யப் பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் மு.இராமநா தன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல் அவர். எத்தனை முறை சிறை சென் றாலும் கடைசி மூச்சுள்ளவரை கழகத்திற்காக கர்ஜித்தவர்.
மும்மொழி திட்டத்தை திணிக் கும் முயற்சியில் மத்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால், இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண் ணன் இராமநாதனும், சுப்பைய னும் இல்லை. மறைந்த தலைவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத் தில் அவர்களின் குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி னார். இதனைத்தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா, சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, உயர்நிலை செயற்திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், முன்னாள் எம்.பி. விடு தலை விரும்பி, திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மற்றும் திமுக கூட் டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.