திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
கோவை, நவ.21- கோவையில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சிங்கா நல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வியாழனன்று முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்கா நல்லூர் திமுக சட்டமன்ற உறுப் பினருமான நா.கார்த்திக் அழைக் கப்படவில்லை. இருப்பினும் தனது தொகுதியில் அரசு நிகழ்வு நடத்தப்படுவதால் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற் காக சென்றபோது அவரை காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன் பாகவே தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கூறுகையில், கோவை மாவட்ட நிர்வாகம், அரசு விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்ப தில்லை. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மாநக ராட்சி நிர்வாகத்திடம் வழங்கி இருக்கின்றேன். ஆனால் இது வரை நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. மேலும் உள்ளாட்சி துறை அமைச்சர் கடந்த 8 ஆண்டு களாக கோவை மாநகராட்சி மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை. பல அடிப்படை பிரச் சனைகளை தீர்க்க உள்ளாட்சி துறை அமைச்சருக்கு திறமை யில்லை. உள்ளாட்சி தேர்தல் வருகின்றது என்றவுடன் தற் போது குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துகின்றனர். இச்சூழலில் சட்டமன்ற உறுக் பினரான தன்னை குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் துறையினர் அனுமதி மறுக்கின்றனர். சட்டமன்ற உறுக் பினருக்கு தெரியாமல் அரசு விழாவினை அதிமுக விழாவை போல் நடத்துகின்றனர். தன்னை குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து காவல் துறையினர் கார்த்திக் எம்.எல்.ஏ-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது அரசு விழா கிடையாது எனவும், அதனால் சட்டமன்ற உறுப்பி னரை அழைக்கவில்லை என விழா ஏற்பாட்டாளர்கள் தெரி விப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை சொல்வதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாக கூறி கார்த்திக் எம்.எல்.ஏ அங் கிருந்து சென்றார். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.