tamilnadu

img

மாட்டிறைச்சி சூப் அருந்திய இளைஞர் மீது தாக்குதல்

ஆதங்கத்தை முகநூலில் பதிவிட்ட தி.வி.க நிர்வாகி கைது

கோவை, ஜூலை 27– மாட்டிறைச்சி சூப் அருந்திய இளைஞர் மீது தாக்குதல் நடத் திய சம்பவத்தை கண்டித்து  முகநூ லில் கருத்தை வெளிப்படுத்திய திவிக பிரமுகர்கோவையில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் மாட்டிறைச்சி சூப் அருந்தினார் என்பதற்காக இந்து முன்னணியினரால் கடுமை யாகத் தாக்கப்பட்டார். இதனைய டுத்து தீண்டாமை ஒழிப்பு முன் னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல் நிலையம் முற்றுகை உள் ளிட்ட போராட்டங்களை நடத்தி சம்பந்தப்பட்ட குண்டர்களை கைது செய்ய வைத்தனர். வடமாநி லங்களில் நடைபெறும் சம்பவத் தைப்போல தமிழகத்திலும் இந்துத் துவ அமைப்பினரின் தாக்குதல் நடவடிக்கை பல்வேறு முற்போக்கு, ஜனநாயக அமைப்பினரை அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இதனைய டுத்து சமூக வளைத்தளங்களில் பலர் தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.  இதில் திராவிடர் விடுதலை கழகத்தின்  கோவை மாநகர் மாவட்ட செயலாளரான  நிர்மல்குமாரும் முகநூலில் ஆதங் கத்தை வெளிப்படுத்தி பதிவிட்டி ருந்தார். இதுகுறித்து மணி என்ப வர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கோவை காட்டூர் காவல்துறை யினர் சனியன்று நிர்மல் குமாரிடம் விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். விசார ணைக்கு பிறகு இருபிரிவினரி டையே விரோதம் ஏற்படுத்தும் விதமான கருத்துகளை பகிர்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்மல்குமாரை கோவை முதலா வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் சனி யன்று ஆஜர்படுத்தினர். இதனை யடுத்து நிர்மல்குமாரை வரும் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டார். இதனையடுத்து திவிக மாநகர் மாவட்ட செயலா ளர் நிர்மல்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  காவல்துறையினரின் நடவடிக் கைக்கு திக, திவிக, தபெதிக, தீண் டாமை ஒழிப்பு முன்னணி உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.