நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக் குட்பட்ட செம்பருத்தி கிராமத்தில் புதனன்று நடை பெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.