நாமக்கல், செப்.29- நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச் சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன் னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். ஏடிஸ் கொசுக்கள் அதிக தூரம் பறக்க முடியாதவை என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைவதால் முறை யாக சிகிச்சை செய்யாவிட்டால் உயிரி ழப்புகள் ஏற்படும். தேங்காய் சிரட்டை, தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்குவதாலும் வீடு களில் குடிதண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக் காமல் இருப்பதாலும் அதிலுள்ள நன்னீரில் டெங்கு கொசுக்கள் முட்டை யிட்டு உற்பத்தியாகின்றன. இந்நிலையில் நாமக்கல் மாவட் டத்தில் நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை யினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கின்றது. குடிதண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி பயன்படுத்துமாறும், பயன்படுத்தாமல் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கு மாறு வீடு வீடாக சென்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகா தாரப் பணியாளர்கள் வீடு களில் குப்பைகளை சேக ரிக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகள் தனியாகவும், மக்கும் குப்பைகள் தனி யாகவும் பிரித்து வாங் கப்பட்டு வருகின்றன. சனியன்று நாமக்கல் நக ராட்சி என்.கொசவம்பட்டி செட்டி யார் தெருவில் நடைபெறும் சுகா தார பணிகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா, நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந் தனர்.