tamilnadu

img

பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் விநியோகம்

அவிநாசி, ஜூலை 18- அவிநாசி பேரூராட்சி சார்பில் மழை நீர் பெருக்குவதற்காக 10க்கும் மேற்பட்ட  வகையான மரக்கன்றுகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரு கின்றன.  அவிநாசி பேரூராட்சியில், ஈரோடு செல்லும் சாலையோரத்தில் புளிய மரம், புங்கமரம், ஆல மரம், வேப்ப மரம்  போன்ற பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்ய உள்ளன. தற்போது இம் மரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்  தன்னார்வ அமைப்புகளும் சாலையோரங் களில் மரங்களை நடுவதாக தெரிவித்தனர்.  

கானூர்

இதேபோல், அவிநாசி ஒன்றியம் கானூரில் இரண்டு மாதங்களாக குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து மழை வளத்தை பெருக்கவும், மழை நீரை சேகரிக்கவும்  வேப்பமரம், புங்க  மரம் உள்ளிட்ட 44 மரக்கன்றுகள் கானூர் குளக்கரையில் நடப்பட்டது.  இதில் கானூர்  பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பூர் சூர்யா ரசிகர் மன்றமும் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.