மேட்டுப்பாளையம், செப்.4- முன்கூட்டியே துவங்கிய யானைகளின் இடப்பெயர்ச்சி யால் கூட்டம் கூட்டமாக யானை கள் வலசை செல்வதால் யானை மனித மோதல்களால் ஏற்படும் பயிர் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் துவங்கி மார்ச் மாதம் வரை கேரள காடுகளில் இருந்து மேட்டுப்பாளையம் வனப் பகுதி வழியே சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு யானைகள் இடப் பெயற்சியாவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக ஆகஸ்ட் மாத இறுதியிலேயே யானைகளின் இடப்பெயர்வு துவங்கி விட்டது. கேரள காடுகளில் பெய்யும் கனமழை மற்றும் மண்சரிவுகள் காரணமாக நான்கு வாரங்கள் முன்னதாகவே தமிழக காடுகளை நோக்கி யானைகள் தங்களது வலசை பயணத்தை துவக்கி விட்ட தாக கருதப்படுகிறது. மேலும், வழக் கமான முறையில் சிறு சிறு கூட்டங் களாக யானைகள் செல்லாமல் பெரிய கூட்டங்களாக ஒரே சமை யத்தில் நூற்றுக்கணக்கில் யானை கள் நகர துவங்கியுள்ளன. இதனால், கேரள காட்டை ஒட்டி யுள்ள மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், காரமடை மற்றும் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் யானைகளின் நடமாட்டத்தை காண முடிகிறது. காலம் காலமாக வலசை செல்லும் யானைகள், அதன் வழிதடம் மறிக்கப்பட்டாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தி னாலோ அவை குழப்படமடைந்து வழிதவறி வனத்தை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்து விடும். இதனால் யானை மனித மோதல் கள் அதிகரித்து பயிர் மற்றும் உயிர் சேதங்கள் தவிர்க்க இயலாதாகி வருகிறது. யானைகளின் கோபத் தால் மனிதர்களும், மனிதர்களின் கோபத்தால் யானைகளும் என இரு தரப்பிலும் காயமடைவதும் இறப்பதும் என தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. யானைகளின் வலசை காலங் களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க, யானைத்தடுப்பு அகழிகள், சோலார் மின்வேலிகள் என வனத் துறை எடுத்த முயற்சிகள் முழுமை யான பலனை தரவில்லை. இதற்கு, யானைகளின் வலசை துவங்கிய இந்த சில நாட்களில் கோவை மாவட் டத்தில், யானை தாக்கி இருவரும், மனித தவறுகளால் இரு யானைக ளும் பலியாகியுள்ளதை உதாரண மாக கொள்ளலாம். இது தவிர ஏரா ளமான வாழை, தென்னை, சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்களும் நாசமாகியுள்ளன. இனி வரும் மாதங் களில் இப்பிரச்சனை தீவிரமடை யும் என அச்சத்தில் ஆழ்ந்துள்ள விவ சாயிகள், தங்களது பயிர் மற்றும் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்பாட்டத் திலும் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளின் வலசை காலங் களில் குறிப்பாக இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணி களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். மலைய டிவார கிராமங்களில் வசிப்போர் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் என எச்சரிக்கும் வனத் துறையினர், இருள் சூழ்ந்த பின்னர் வனத்தை ஒட்டியுள்ள இடங்களில் நடமாட கூடாது. அதிகாலையில் இயற்கை உபாதைகளுக்காக புதர் மண்டியுள்ள இடங்களுக்கு செல்ல கூடாது. யானைகளை கண்டால் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். தாமாக அவற்றை விரட்ட முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், வனம் சார்ந்த சாலைகளை யானைகள் கடந்து சென்றால் அவற்றை இடை யூறு செய்யாமல் பொறுமை காக்க வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் யானைகள் வலசை செல்லும் பாதையில் குறுக்கிடு வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், வீட்டின் வெளியே திறந்த வெளியில் உறங்குவது, யானைகள் விரும்பி உண்ணும் பலாப்பழம், வாழைப்பழம் போன்ற வற்றை வீட்டில் இருப்பு வைப்பது, இரவு நேரங்களில் மதுபோதையில் நடமாடுவது கூடாது என வலி யுறுத்துகின்றனர். மேலும், ஊருக்குள் யானைக ளின் நடமாட்டம் தெரிந்தால் உட னடியாக 24 மணி நேரமும் செயல் படும் “1800 4254 5456” என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறி வுறுத்துகின்றனர். யானைகளின் பின்னே சப்தமிட்டபடி ஓடி சென்று விரட்டுவது, பட்டாசுகளை வெடிப் பது, அவை வெளியேற வழியில்லா மால் கூட்டமாக சுற்றி வளைப்பது போன்றவை குற்றமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர். காடுகளின் காவலனான யானைகள் ஒரு இயற்கை நிகழ் வாக வலசை செல்வதை எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்ப தோடு, இடம் மாறும் யானைக ளுக்கும் இதனை கண்காணிக்கும் வனத்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க மக்கள் முன்வரவேண்டும் என்று இயற்கை நல ஆர்வலர்கள் கூறிகின்றனர். வன எல்லைகளில் மண் மூடி கிடக்கும் அகழிகளை ஆழப்படுத்து வது, சோலார் மின்வேலிகளை சீரமைப்பது, யானை விரட்டும் பணியில் கூடுதல் வன பணியாளர் களை களம் இறக்குவது, யானைகள் அதன் வழித்தட பாதையில் செல் கிறதா என தொடர்ந்து கண்காணிப் பது, வனத்தை விட்டு அவை வெளி யேறாமல் தடுப்பது போன்றவை இவற்றின் வலசை காலங்களில் ஏற்படும் யானை மனித மோதல் களையும் அதனால் ஏற்படும் விரும்பதகாத நிகழ்வுகளை கட்டுப் படுத்தும். காடுகள் ஆக்கிரமிப்பு, யானை களின் வலசை பாதையில் செயற்கை யாய் ஏற்படுத்தப்படும் குறுக்கீடு கள் தடுப்புகள், வரைமுறையின்றி அமைக்கப்பட்டு வரும் சட்ட விரோத மின்வேலிகள் போன்ற வற்றை கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்தால் மட்டுமே இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக் கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இரா.சரவணபாபு